கோவையில் குளத்தில் மிதந்த பெண் பிணம்!!!

 -MMH 

கோவை சுந்தராபுரம் முருகன் நகரை சேர்ந்தவர் ராயப்பன் (வயது 38). இவர் ஆர்.எஸ்.புரம் தடாகம் சாலையில் உள்ள முத்தண்ணன் குளத்தை மீன் பிடிப்பதற்காக குத்தகைக்கு எடுத்து மீன் பிடித்து வருகிறார். இவரிடம் பரிசல் ஓட்டும் பணியில் ரங்கநாதன் என்பவர் இருந்து வருகிறார். 

இந்தநிலையில் நேற்று ராயப்பன் மற்றும் ரங்கநாதன் ஆகியோர் மீன்பிடிப்பதற்காக பரிசலில் முத்தண்ணன் குளத்துக்கு சென்ற போது அங்கு இறந்தநிலையில் பெண் உடல் மிதந்தது பார்த்தவர் அவர் ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். 

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு பிணமாக மிதந்த பெண்ணின் உடலை தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் மீட்டு  பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். 

குளத்தில் பிணமாக மிதந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து தெரியவில்லை. மேலும் அவர் குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது அவரை யாரேனும் கொலை செய்து குளத்தில் உடலை வீசி சென்றனரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments