கோவையிலிருந்து சீரடிக்கு சிறப்பு ரயில்! டிக்கெட் முன்பதிவு தொடங்கியது!!

 -MMH 

 கோவையிலிருந்து ஷீரடிக்கு இயக்கப்படும் வாராந்திர ரயில் சேவைக்கான டிக்கெட் விற்பனை துவங்கியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியிலுள்ள சாய்பாபா கோவிலுக்கு, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள், ஆண்டு முழுவதும் ஆன்மிகச் சுற்றுலா செல்கின்றனர். பல்வேறு மாநிலங்களிலிருந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன. கோவையிலிருந்து ஷீரடிக்கு நேரடி போக்குவரத்து இயக்க, கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், ஷீரடிக்கு ஐந்து நகரங்களிலிருந்து தனியார் ரயில்களை இயக்குவதற்கு, பிரதமர் மோடியின் 'பாரத் கவுரவ்' என்ற திட்டத்தின் கீழ், ரயில்வே துறை அனுமதி அளித்தது. இதில், கோவையும் இடம் பெற்றுள்ளது.

கோவையிலிருந்து ஷீரடிக்கும், ஷீரடியிலிருந்து கோவைக்கும் வாராந்திர ரயில் இயக்கப்படவுள்ளது. ஆந்திரா மாநிலம், மந்த்ராலயா வழியாகச் செல்வதால், அங்கு செல்லும் பக்தர்கள் இரண்டு கோவில்களுக்கும் செல்ல உதவியாக இருக்கும். இந்த ரயில் முதல் முறையாக தனியாரால் இயக்கப்படவுள்ளது. மிகவும் துாய்மையாகவும், சர்வதேச தரத்திலான விருந்தோம்பலுடனும், இந்த ரயிலின் சேவை அமையுமென்று, ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், இந்த ரயில் வரும், 14ம் தேதியில் இருந்து இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ரயிலுக்கான டிக்கெட் விற்பனை துவங்கியுள்ளது. கோவையில், ஐந்து, திருப்பூர், ஈரோட்டில், தலா ஒரு இடத்திலும் டிக்கெட் கிடைக்கிறது. இதுதவிர, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூரில் உள்ள அனைத்து சாய்பாபா கோவில்களிலும், டிக்கெட் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-சி.ராஜேந்திரன்.

Comments