மெட்ரோ ரயில் நிலையத்தில் பொதுமக்கள் தர்னா!!

 

   -MMH 

    சென்னை புது வன்னாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில், ரயிலின் கதவுகள் சரியாக இயங்காததை கண்டித்து பொதுமக்கள் தர்னாவில் ஈடுபட்டனர்.

உயர்நீதிமன்ற நிறுத்தத்தில் பெண் ஒருவர் ரயிலில் ஏறியபோது, தானியங்கி கதவுகள் மூடியதால் தன் குழந்தையோடு கதவுகளுக்கு இடையே மாட்டிக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் இருவர் கதவுகளுக்கு நடுவே மாட்டிக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மெட்ரோ ரயில் ஓட்டுநரிடம் பொதுமக்கள் தெரிவித்தபோது அவர் இதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை என தெரிகிறது. இதை கண்டித்த பொதுமக்கள் புது வன்னாரப்பேட்டையில் உள்ள ரயில் நிலையத்தில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-கார்த்திகேயன் தண்டையார் பேட்டை.

Comments