கோவை விமான நிலையத்தில் தானியங்கி ரோபோக்கள்!!

 -MMH 

கோவை விமான நிலையத்தில் பயணிகளுக்கு உதவ தானியங்கி ரோபோக்கள் இன்று  முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. கோவை சர்வதேச விமான நிலையத்திலிருந்து தினமும் 20-க்கு மேற்பட்ட விமானங்களில் ஏராளமான பயணிகள் பயணித்து வருகின்றனர். 

கோவை விமான  நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு உதவும் வகையில் 2 ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த அதிநவீன ரோபோக்கள் செயற்கை நுண்ணறிவு கொண்டு உள்ளது. இதன்மூலம் பயணிகளுக்கு தேவையான தகவல்களை எவ்வித உதவியும் இன்றி வழங்க முடியும். ஒரு ரோபோ விமான புறப்பாடு முனையத்திலும், மற்றொரு ரோபா விமான வருகை முனையத்திலும் நிறுத்தப்படும். 

இந்த ரோபா யாரின் உதவியும் இன்றி தானாக நகரும் தன்மை கொண்டது. மேலும் விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை வரவேற்று, அவர்களுக்கு தேவையான தகவல்களை அளிக்கும். இதற்காக அந்த ரோபோக்களில் செயற்கை நுண்ணறிவு பொருத்தப்பட்டு உள்ளது. பயணிகள் உதவி மையத்தை தொடர்பு கொள்ள விரும்பினால், ரோபோ உடனடியாக உதவி மையத்தை தொடர்பு கொண்டு தகவல்களை அளிக்கும்.

ரோபோக்கள் பயணிகள் விமானத்திற்கு செல்ல வேண்டிய வழி, பாஸ்போர்ட் சரிபார்ப்பு இடம் உள்ளிட்ட இடங்களுக்கான வழிகளை பயணிகளுக்கு தெரிவிக்கும் திறன் கொண்டதாக உள்ளது. இந்த ரோபோக்கள் விமான பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments