கல்லுக்குழி நீரில் மூழ்கி சிறுவர்கள் பலி!!

 -MMH 

கோவை கே.ஜி.சாவடி புதூர் வ.உ.சி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுச்சாமி. இவருடைய மகன் சஞ்சய் குமார் (வயது17), அதே பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் சஞ்சய் (17), இருவரும் டவுன்ஹால் பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தனர். சம்பவத்தன்று சஞ்சய் மற்றும் சஞ்சய் குமார்  தன் நண்பர்களுடன் கோவை கே.ஜி சாவடி, காளியாபுரம் புறம்போக்கு இடத்தில் உள்ள கல்லுக்குழியில்  குளிக்க சென்றுள்ளனர்.

இதில் சஞ்சய் மற்றும் சஞ்சய்குமார் இருவருக்கும் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கினர் இதனை கண்ட சக நண்பர்கள் அவரை மீட்க முயன்றனர் ஆனால் முடியாததால் கே.ஜி.சாவடி போலீசுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து கிணத்துக்கடவு தீயணைப்பு துறை மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் 3 மணி நேரம் போராடி கல்லுக்குழியில் மூழ்கிய 2 மாணவர்களின் உடலையும் தீயணைப்பு வீரர்கள் பிணமாக மீட்டனர்.

இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments