ஐதராபாத்தில் பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டம்: மோடி, அமித்ஷா பங்கேற்பு!

-MMH

 ஐதராபாத் நகரில் பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி, அமித்ஷா, நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர் பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டம் தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் மாதாப்பூர் சர்வதேச கன்வென்சன் சென்டரில் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவந்த பிரதமர் மோடியை கட்சித்தலைவர் ஜே.பி.நட்டா வரவேற்றார். இதையொட்டி பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சக்திவாய்ந்த ஐதராபாத் நகருக்கு வந்திறங்கி இருக்கிறேன். இந்த கூட்டத்தில், கட்சியை மேலும் பலப்படுத்தும் வகையில் நாங்கள் பல்வேறு பரந்த விஷயங்கள் குறித்து விவாதிப்போம் என குறிப்பிட்டுள்ளார். 

இந்த செயற்குழு கூட்டத்தில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள், நிர்வாகிகள் என 300-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். முன்னதாக செயற்குழு கூட்டத்தை குத்து விளக்கேற்றி பா.ஜ.க தலைவர் ஜே.பி. நட்டா தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வை முன்னிட்டு, ஐதராபாத் நகரம் விழாக்கோலத்தில் காட்சியளிக்கிறது.

 -செய்திப் புயல்.

Comments