மலைபாதையில் விபத்து!! ஒருவர் பலி!! இருவர் காயம்!!

 -MMH 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை வழியாக கேரளா மாநில எர்ணாகுளத்திற்கு  ஜீப் வாகனத்தில் சுற்றுலா சென்று கொண்டிருந்தபோது, வால்பாறை அருகே உள்ள வரட்டுப்பாறை எஸ்டேட் பகுதியில் சாலையில் உள்ள பள்ளத்தில் ஏறி இறங்கியபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஜீப் உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது.


 

இதில் பலத்த காயமடைந்த எர்ணாகுளம் பகுதி சந்தோஷ் குமார் வயது 42 என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த  குமார் வயது 46 மற்றும் மனோஜ் வயது 42 ஆக இருவரும் லேசான காயங்களுடன் உயிர்த்தப்பினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம்  தலைமையிலா காவல்துறையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 பிறகு உயிரிழந்தவரின் உடலை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் காயமடைந்த அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

-செய்யத் காதர்,குறிச்சி.

Comments