ஈரோடு - நெல்லை இடையே ரயில் சேவை; இனிப்பு வழங்கி கொண்டாடிய பயணிகள்!

 

    -MMH 

      ஈரோட்டில் இருந்து திருநெல்வேலிக்கு தினமும் முன்பதிவு இல்லா விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. ஈரோட்டில் இருந்து மதியம் 12.50 மணிக்கு புறப்படும் ரயில் திருநெல்வேலிக்கு இரவு 10 மணிக்கு சென்றடையும். இதேபோல் மறுமார்க்கமாக காலையில் திருநெல்வேலி இருந்து கிளம்பும் எக்ஸ்பிரஸ் ரயில் மாலையில் ஈரோட்டுக்கு வந்தடையும்.

இந்த ரயிலில்கள் முலம் தினமும் தென் மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயணம் செய்து வந்தனர். இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் இந்த ரயில்கள் மூலம் பயணம் செய்து வந்த பல ஆயிரம் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

கொரோனா பரவல் குறைந்த பிறகு ரயில் சேவை தொடங்கப்பட்ட போதில், இந்த ரயில் சேவை இயக்கப்படவில்லை இதனால், ஈரோடு - நெல்லை விரைவு ரயில் சேவை மீண்டும் தொடங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்ற ரயில்வே நிர்வாகம், ஈரோடு - நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் இன்று ஜூலை 11 முதல் இயக்கப்படும் என அறிவித்தது.

அதன்படி ஈரோடு ரயில் நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.35 மணிக்கு ஈரோடு - திருநெல்வேலி பயணிகள் ரயில் புறப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ரயில் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பயணிகள் உற்சாகத்துடன் ஒருவருக்கொருவர் இனிப்பு பரிமாறிக்கொண்டனர்.

மதியம் 1.35 மணிக்கு ஈரோட்டில் இருந்து கிளம்பும் ரயில் திருநெல்வேலிக்கு இரவு 9.45 மணிக்கு சென்றடையும். மறு மார்க்கத்தில் திருநெல்வேலியில் இருந்து காலை 6.15 மணிக்கு கிளம்பும் ரயில் மதியம் 2:30 மணிக்கு ஈரோடு ரயில் நிலையத்தில் வந்தடையும். 

நாளைய வரலாறு செய்தியாளர்

-அன்சாரி, நெல்லை. 

Comments