ஒட்டப்பிடாரம் உட்பட 23 துணை வட்டாட்சியர் மாற்றம்! ஆட்சியர் உத்தரவு!!

தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வந்த 23 துணை வட்டாட்சியர்களை நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் மரு.செந்தில்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி, தூத்துக்குடி கூடுதல் தலைமை இடத்து துணை வட்டாட்சியராக பணியாற்றி வந்த இசக்கி முருகேஸ்வரி, ஓட்டப்பிடாரம் மண்டல துணை வட்டாட்சியராகவும்,

சாத்தான்குளம் கூடுதல் தலைமையிடத்து துணை வட்டாட்சியராக பணியாற்றி வந்த சுமதி, ஓட்டப்பிடாரம் மண்டல துணை வட்டாட்சியராகவும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஐ பிரிவு தலைமை உதவியாளராக பணியாற்றி வந்த ஜானகி, ஏரல் மண்டல துணை வட்டாட்சியராகவும்,

கயத்தாறு தலைமை இடுத்து துணை வட்டாட்சியராக பணியாற்றி வந்த சுபா, விளாத்திகுளம் மண்டல துணை வட்டாட்சியர் 1 ஆகவும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கே பிரிவு தலைமை உதவியாளராக பணியாற்றி வந்த ரம்யா தேவி, தூத்துக்குடி மண்டல துணை வட்டாட்சியராகவும்

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

திருவைண்டம் வட்ட வழங்க அலுவலராக பணியாற்றி வந்த அந்தோணி ஜெபராஜ், கயத்தாறு மண்டல துணை வட்டாட்சியராகவும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எல் பிரிவு தலைமை உதவியாளராக பணியாற்றி வந்த சீதா பேச்சி, கோவில்பட்டி மண்டல துணை வட்டாட்சியராகவும்,

கோவில்பட்டி மண்டல துணை வட்டாட்சியராக பணியாற்றி வந்த செல்வகுமார், விளாத்திகுளம் மண்டல துணை வட்டாட்சியர் 2 ஆகவும், ஏரல் மண்டல துணை வட்டாட்சியராக பணியாற்றி வந்த சதீஷ்குமார், திருச்செந்தூர் மண்டல துணை வட்டாட்சியராகவும்,

ஓட்டப்பிடாரம் மண்டல துணை வட்டாட்சியராக பணியாற்றி வந்த ஆனந்த், தூத்துக்குடி கூடுதல் தலைமையிடத்து துணை வட்டாட்சியராகவும், ஓட்டப்பிடாரம் மண்டல துணை வட்டாட்சியராக பணியாற்றி வந்த வடிவேல் குமார், சாத்தான்குளம் கூடுதல் தலைமை இடுத்து துணை வட்டாட்சியராகவும்,

கயத்தாறு மண்டல துணை வட்டாட்சியராக பணியாற்றி வந்த திரவியம், கயத்தாறு வட்ட வழங்க அலுவலராகவும், தூத்துக்குடி மண்டல துணை வட்டாட்சியராக பணியாற்றி வந்த செல்வ பூபதி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கே பிரிவு தலைமை உதவியாளராகவும்,

திருச்செந்தூர் மண்டல துணை வட்டாட்சியராக பணியாற்றி வந்த பாலசுந்தரம், திருச்செந்தூர் வட்ட வழங்கல் அலுவலராகவும், திருச்செந்தூர் வட்ட வழங்க அலுவலராக பணியாற்றி வந்த சங்கரநாராயணன், திருச்செந்தூர் தேர்தல் துணை வட்டாட்சியராகவும்,

திருச்செந்தூர் தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியராக பணியாற்றி வந்த ஜெயகிருஷ்ணன், ஸ்ரீவைகுண்டம் வட்ட வழங்க அலுவலராகவும், விளாத்திகுளம் மண்டல துணை வட்டாட்சியர் 2 ஆக பணியாற்றி வந்த சுடலைமணி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எல் பிரிவு தலைமை உதவியாளராகவும்,

விளாத்திகுளம் மண்டல துணை வட்டாட்சியர் 1 ஆக பணியாற்றி வந்த இரத்தின சங்கர், விளாத்திகுளம் வட்ட வழங்கல் அலுவலராகவும், விளாத்திகுளம் வட்ட வழங்க அலுவலராக பணியாற்றி வந்த கருப்பசாமி, ஓட்டப்பிடாரம் வட்ட வழங்க அலுவலராகவும்,

ஓட்டப்பிடாரம் வட்ட வழங்க அலுவலராக பணியாற்றி வந்த தாகீர் அகமது, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஜி பிரிவு தலைமை உதவியாளராகவும், கயத்தாறு வட்ட வழங்கல் அலுவலராக பணியாற்றி வந்த வெள்ளத்துரை, கயத்தாறு தலைமையிடத்து துணை வட்டாட்சியராகவும்,

தூத்துக்குடி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த பொன்லட்சுமி, ஏரல் வட்ட வழங்க அலுவலராகவும், ஏரல் வட்ட வழங்க அலுவலராக பணியாற்றி வந்த முரளிதரன், தூத்துக்குடி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம் கண்காணிப்பாளராகவும் பணியிடம் மாற்றம் செய்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மரு.செந்தில்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.

Comments