ஏரல் அருகே கோவில் கதவை உடைத்து பித்தளை குத்துவிளக்குகளை திருடிய 2 பேரை கைது!!

    -MMH 

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே சிறுதொண்டநல்லூர் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் கடந்த 03.08.2022 அன்று இரவு கதவு உடைக்கப்பட்டு அங்கு இருந்த 4 குத்துவிளக்குகள் திருடு போயுள்ளது. இது தொடர்பாக கோவில் நிர்வாகி அசோக் (45) என்பவர் அளித்த புகாரின் பேரில் ஏரல் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில், சின்ன நட்டாத்தி பகுதியை சேர்ந்த செந்தூர் பாண்டி மகன் முத்துவேல் (25) மற்றும் சுயம்புலிங்கம் மகன் மாரிமுத்து (25) ஆகிய இருவரும் கோவிலில் உள்ள 4 பித்தளை குத்துவிளக்குகளை திருடியது தெரியவந்தது.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனையடுத்து உதவி ஆய்வாளர் இமானுவேல் ஜெயசேகர் உடனடியாக முத்துவேல் மற்றும் மாரிமுத்து ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த ரூ.10ஆயிரம் மதிப்புடைய 4 பித்தளை குத்துவிளக்குகளை பறிமுதல் செய்தார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முத்தரசு கோபி, ஶ்ரீவைகுண்டம்.

Comments