கோவை செல்வபுரத்தில் 75வது சுதந்திர தின பவளவிழா!!
இந்திய தேசத்தின் 75வது சுதந்திர தினபவள விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் தேசிய கொடியேற்று விழா நடைபெற்று வருகிறது. அதன் ஒரு நிகழ்வாக மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்டம் மத்திய பகுதிக்கு உட்பட்ட செல்வபுரம் பகுதியில் கொடியேற்று விழா
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
78வது வார்டு செயலாளர் யூசுப், 77வது வார்டு துணை செயலாளர் கமால் பாஷா, 79 வதுவார்டு செயலாளர் பீர் முஹம்மது ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ் மாவட்ட துணை செயலாளர் ATR.பதுருதீன், மத்திய பகுதி செயலாளர் இப்ராஹிம், பொருளாளர் அபு பர்க்கத், துணைச் செயலாளர் மொய்தீன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் , மாவட்ட துணைச் செயலாளர் HM.முஹம்மது ஹனீப் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இந்நிகழ்வில் இளைஞரணி மாவட்ட செயலாளர் அன்சர், மாவட்ட பொருளாளர் பைசல் ரகுமான், மாவட்ட துணைச் செயலாளர் சையது , விவசாய அணி மாவட்ட செயலாளர் அன்வர், வணிகர் சங்க மாவட்ட செயலாளர் ஹாருண், மாவட்ட பொருளாளர் நோபல் பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இப்ராஹிம், அக்கீம், 78வது வார்டு பொருளாளர் சமீர்கான், துணைச் செயலாளர் சம்சுதீன், மற்றும் நிர்வாகிகள் அன்சர், ஜாகிர், உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.
Comments