கோவை மஜக தெற்கு பகுதி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்!!

    -MMH 

மனிதநேய ஜனநாயக கட்சி யின் சார்பில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை சாதி, மத, வழக்கு  பேதமின்றி முன் விடுதலை செய்ய வலியுறுத்தி செப்டம்பர் 10 அன்று சென்னையில் தலைமைச் செயலக முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.

அதன் முதற்கட்ட பணிகள் தொடர்பாக மஜக கோவை மாநகர் தெற்கு பகுதி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் பகுதி பொறுப்பாளர் A.காஜா உசேன் அவர்கள், தலைமையில் நேற்று மாலை கட்சி அலுவலகத்தில் நடைப்பெற்றது.

இதில் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ்,மாவட்ட துணை செயலாளர் ஜாபர்சாதிக், ஆகியோர் பங்கேற்று போராட்டத்தின் அவசியம் குறித்தும், இப்போராட்டத்தில் அதிகப்படியான மக்கள் கலந்து கொள்வது குறித்தும், முதற்கட்ட பணிகள் குறித்தும் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினர். இக்கூட்டத்தில் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள்  மாவட்ட செயலாளர் M.H. அப்பாஸ் அவர்கள் முன்னிலையில் தங்களை மஜக வில் இணைத்துக்கொண்டனர்.

இதில் இளைஞரணி மாவட்ட பொருளாளர் பைசல், இளைஞர் அணி மாவட்ட துணைச் செயலாளர் சதாம்,மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் ஆசிக், பகுதி பொருளாளர் ஜாபர், துணைச் செயலாளர்கள் ஜியா,முகமது, சுற்றுச்சூழல் அணி செயலாளர் கனி, வர்த்தக அணி செயலாளர் நசீர், இளைஞர் அணி செயலாளர் சாதிக், ஜக்கரியா,முஜிபுர் ரஹ்மான்உள்ளிட்ட உள்ளிட்ட பகுதி நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப், கோவை.

Comments