இரண்டு உலக சாதனைகளை செய்து அசத்திய மிதுல் ஹரீஷ்!!

  -MMH 

கோவை முல்லை தற்காப்பு கலை கழகத்தை பயிற்சி பெறும்  மிதுல் ஹரீஷ் கண்களை கட்டி கொண்டு, ஒரு கையில் சுருள்வாள்,ஒரு கையில் சிலம்பம் சுற்றியும், மற்றும் அடி முறை என தொடர்ந்து 17  மணி நேரம் இரண்டு  உலக சாதனைகளை செய்து அசத்தியுள்ளார்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

கோவை   சின்னவேடம்பட்டி மற்றும் சேரன் மாநகர்  பகுதியிலுள்ள  முல்லை தற்காப்பு மற்றும் விளையாட்டு கழகத்தில்  5 வயது முதல் அனைத்து வயது மாணவ மாணவிகளுக்கு தற்காப்பு கலை கற்றுத்தரப்படுகிறது.

சிலம்பம் அடிமுறை ,வேல்கம்பு மான்கொம்பு , சுருள் வாள் , வாள் வீச்சு,  வளரி, போன்ற ஆயுதப் பயிற்சிகள் பாரம்பரியம் மாறாமல் கற்றுத்தரப்படுவதுடன்,அவர்கள் இதே கலைகளில் உலக சாதனை புரியவும் ஊக்கப்படுத்தி வருகின்றனர்..இந்நிலையில், கோவை சேரன் மாநகர்,பகுதியை சேர்ந்த மகேஷ் மற்றும் பகவதி ஆகியோரின் மகன் மிதுல் ஹரீஷ்.,சிறு வயது முதலே சிலம்பம் சுற்றுவது,மற்றும் தமிழக அடி முறை கலைகளை முல்லை தற்காப்பு பயிற்சி மையத்தில் பயின்று வருகிறார்.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில் தனது தீவிர பயிற்சியால் தொடர்ந்து 17 மணி நேரம்  சிலம்பம், சுருள்வாள் மற்றும் அடி முறையில் புதிய உலக சாதனை படைத்துள்ளார். காலை நான்கு மணி முதல் கண்களை கட்டி கொண்டு ஒரு கையில் சுருள்வாள் இன்னொரு கையில் சிலம்பம் என தொடர்ந்து 13 மணி நேரம் சுற்றி சாதனை படைத்ததுடன் மீண்டும் தொடர்ந்து நான்கு மணி நேரம் அடிமுறையில், நிலை சுவடு முறைகளை நான்கு மணி நேரம் செய்து,  தனது 17 மணி நேர சாதனையை செய்து இந்தியா புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் பிடித்தார். 

இரண்டு உலக சாதனைகளை ஒரே நேரத்தில் செய்த மாணவர் மிதுல் ஹரீஷை அவரது பயிற்சியாளர் பிரகாஷ் ராஜ் மற்றும், பெற்றோர்,ஆசிரியர்கள் ,பொதுமக்கள் என அனைவரும் பாராட்டினர்.

- சீனி,போத்தனூர்.

Comments