தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு!!

  -MMH 

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 1 மற்றும் 2-வது யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் 420 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன்கொண்ட 5 யூனிட்டுகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் தினமும் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அனல் மின்நிலையத்தில் திடீரென ஏற்பட்ட பழுது காரணமாக 1 மற்றும் 2-வது யூனிட்டுகள் இன்று இயங்கவில்லை. இதனால் அதில் இருந்து உற்பத்தி செய்யப்படும் 420 மெகாவாட் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

மேலும் மற்ற 3 யூனிட்டுகள்  இயங்கி வருவதால் 630 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம் பகுதியில் 400 மேற்பட்ட காற்றாலை மூலம் தற்போது அதிகளவு மின்சாரம் கிடைத்து வருவதால் அனல்மின் நிலையத்தின் 2 யூனிட்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அனல்மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.

Comments