விரைவில் வருகிறது பே வார்டு! அரசு மருத்துவமனை டீன் தகவல்!!

    -MMH 

கோவை அரசு மருத்துவமனையில் கட்டண சிகிச்சை வார்டு ('பே வார்டு') அமைப்பதற்கு தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் சார்பில், 97 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு மருத்துவப் பணிகள் கழகம் சார்பில், குறைந்த கட்டணத்தில் தனியார் மருத்துவமனைக்கு இணையாக மருத்துவ சேவையை வழங்கும் நோக்கில் அரசு மருத்துவமனைகளில் கட்டண சிகிச்சை வார்டு செயல்படுகிறது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் கட்டண சிகிச்சை வார்டு செயல்பட்டு வருகிறது.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இவ்வசதி, கோவை அரசு மருத்துமனையில் துவக்க அரசு மருத்துவப்பணிகள் கழகம் 97 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதுகுறித்து அரசு மருத்துவமனையின் டீன் நிர்மலா கூறுகையில், "கோவை அரசு மருத்துவ மனையின் முதல் தளத்தில் கட்டண சிகிச்சை வார்டு அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அதில் 3 தனி அறைகள், 12 படுக்கைகளுடன் கூடிய சிகிச்சை வார்டில் தலா 6 படுக்கைகள் ஆண்கள், பெண்கள் என தனி தனியாக பிரிக்கப்பட்டுள்ளது. மகப்பேறு சிகிச்சைக்காக தனி அறைகள் அமைக்கப்படும். இந்த கட்டண சிகிச்சை வார்டு விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது,'' என்றார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-சுரேந்தர்.

Comments