பணிக்கு சென்ற செவிலியர் மாயம்!! போலீஸ் விசாரணை!!

    -MMH 

கயத்தாறில் தனியார் மருத்துவமனையில் செவிலியர், காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள சுப்பிரமணியபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கனகராஜ். 

இவரது மகள் சாந்தி (23), இவர் கயத்தாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸ் வேலை செய்து வருகிறார். கடந்த 20ஆம் தேதி மருத்துவமனைக்கு  வேலைக்கு சென்ற செவிலியர் வீடு திரும்பிவில்லை.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதையடுத்து குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் மருத்துவமனையில்  அவரைப் பற்றிய தகவல் தெரியவில்லை. இது குறித்து அவரது தாயார் ஆரோக்கியம்மாள் கயத்தார்  காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஓட்டப்பிடாரம். 

Comments