தூத்துக்குடியில் பள்ளி மாணவி திடீர் மாயம்!!

    -MMH 

தூத்துக்குடியில் பள்ளி மாணவி ஒருவர் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் தென் திருப்பேரை கிராமத்தை சேர்ந்தவர் செந்தில். இவரது மகள் சுபாஷினி (15), தூத்துக்குடியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 4ஆம் தேதி பள்ளிக்கு சென்றுள்ளார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. 

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதையடுத்து குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவரைப் பற்றிய தகவல் தெரியவில்லை. இதுகுறித்து அவரது தந்தை செந்தில் மத்திய பாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பெயரில் இன்ஸ்பெக்டர் பொறுப்பு அனிதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முத்தரசு கோபி, ஶ்ரீவைகுண்டம்.

Comments