திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!!

     -MMH 

திருப்பதி திருமலை கோயிலில் வார இறுதியில் பெருந்திரளான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆகஸ்ட் 11 முதல் 15 வரையிலான பண்டிகை நாட்களில் கூட்டம் அலைமோதும் இதன்காரணமாக மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைக்குழந்தைகளுடன் உள்ள பெற்றோர்கள் திருப்பதி யாத்திரை ஒத்திவைக்குமாறு திருமலை திருப்பதி தேவஸ்தானம் வலியுறுத்தியுள்ளது.

ஆகஸ்ட் 19 வரை பக்தர்கள் கூட்டம் எதிர்பார்ப்பை விட அதிகமாகவே காணப்படும்,என்பதால் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும், என்றும் தெரிவித்துள்ளது. 

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மேலும் மங்களகரமான புரட்டாசி மாதம் செப்டம்பர் 18 முதல் தொடங்கி அக்டோபர் 17 வரை நீடிக்கும் இக்காலத்தில் திருமலை கோயிலுக்கு வருவோர் எண்ணிக்கை வழக்கத்தைவிட கூடுதலாக இருக்கும். என்பதால் அக்டோபர் 17க்கு பின் மேலே குறிப்பிட்ட அவர்கள் தங்கள் பயணத்தை திட்டமிட்டு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-P. இரமேஷ், வேலூர்.

Comments