கொலை செய்யப்பட்ட பஞ்சாயத்து தலைவருக்கு அமைச்சர் நேரில் சென்று அஞ்சலி!!

      -MMH 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்துள்ள தெற்கு திட்டங் குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்ராஜ் (67). இவர் கடந்த 22-ம் தேதி தனது தோட்டத்தில் இருக்கும் போது வெட்டி கொலை செய்யப்பட்டார். 

இது தொடர்பாக 2 வாலிபர்களை கிழக்கு போலீசார்கைது செய்தனர். இந்த நிலையில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தெற்கு திட்டங்குளம் கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து தலைவர் பொன்ராஜ் வீட்டிற்கு இன்று சென்றார்.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த பொன்ராஜ் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், அவர் மனைவி பொன்னுத்தாய் மற்றும் உறவினர்களுக்கு அமைச்சர் ஆறுதல் கூறினார். 

இந்நிகழ்வில் திமுக நகர செயலாளர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், ராதாகிருஷ்ணன், அரசு வக்கீல் ராமச்சந்திரன், விவசாய தொழிலாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சண்முகராஜ், விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் சந்தனம், கிளை செயலாளர்கள் தங்கராஜ், சார்லஸ் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஓட்டப்பிடாரம். 

Comments