ரூ.8ஆயிரம் மதிப்புள்ள செல்போன் ஒன்று வாங்கி 10ஆயிரம் பணமும் பெற்ற குமரி நபர்!!

    -MMH 

சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டி செல்போன் கடைக்கு ரூ.10ஆயிரம் அபராதம் விதித்து குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. 

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தாலுகாவைச் சார்ந்த மெர்லின் ஜெயபால் என்பவர் செட்டி குளம் ஜங்சனிலுள்ள மொபைல் கடையில் ரூ.8ஆயிரம் மதிப்புள்ள செல்போன் ஒன்று வாங்கியுள்ளார். வாங்கிய ஒரு மாதத்திலேயே மொபைல் வேலை செய்யாததால் கடைக்காரரிடம் சரி செய்ய கொடுத்துள்ளார். உடனடியாக பழுது பார்த்து திரும்ப சரி செய்து கொடுத்து விட்டார்கள். ஆனால் மீண்டும் 10 நாட்களில் செல்போன் சரியாக வேலை செய்யாததால் கடைக்காரரை அணுகியுள்ளார். 

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஆனால் அவர்கள் இதில் தயாரிப்பு பிரச்சினை உள்ளது என்று திரும்ப கொடுத்து விட்டனர். மீண்டும் மீண்டும் அதே பிரச்சினை ஏற்பட்டதால் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான மெர்லின் ஜெயபால் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். 

வழக்கை விசாரித்த கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் ஆ.சங்கர் ஆகியோர் செட்டி குளம் ஜங்சனிலுள்ள மொபைல் கடையின் சேவை குறைப்பாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு ரூ.10ஆயிரம் நஷ்ட ஈடு மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.3ஆயிரம் ஆகியவற்றையும் ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என  உத்தரவிட்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முத்தரசு கோபி, ஸ்ரீவைகுண்டம்.

Comments