தூத்துக்குடியில் பைக்குகள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்!!

    -MMH 

தூத்துக்குடி தாளமுத்து நகர் கணேச புரத்தை சேர்ந்தவர் பூபதிராஜா மகன் பால அருண் (19), இவர் தூத்துக்குடியில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 26 ஆம் தேதி தூத்துக்குடி ராம்தாஸ் நகரில் தனது மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தார். 

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அப்போது பின்னால் வந்த ராம்தாஸ் நகரை சேர்ந்த சுப்பையா மகன் சிவசக்தி (30) என்பவர் ஓட்டி வந்த பைக் இவர் மீது மோதியுள்ளது. இவ்விபத்தில் பலத்த காயம் அடைந்த இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில், கல்லூரி மாணவர் பால அருண் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தாளமுத்து நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கல்லூரி மாணவர் விபத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முத்தரசு கோபி,ஶ்ரீவைகுண்டம்.

Comments