வால்பாறை தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம்!!


கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த தினப்படி 425 ரூபாய் 40 பைசா தர  இறுதி அரசாணை வெளியிட தமிழக அரசை வலியுறுத்தி காந்தி சிலை மற்றும் ஸ்டென்மோர் ஜங்ஷன், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல  இடங்களில் வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர் பாதுகாப்பு கூட்டமைப்பு மற்றும் வால்பாறை மக்கள் இயக்கம் சார்பாக கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. 

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிகழ்ச்சியில் அனைத்து தேயிலை தோட்ட தொழிலாளர்களும் ஆர்வத்துடன்  கையொப்பம் செய்தார்கள். மேலும் இந்நிகழ்ச்சியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒன்றிய செயலாளர் தலைவர் S.கல்யாணி மற்றும் CITU பொதுச் செயலாளர் P. பரமசிவம், 


INTUC பொதுச் செயலாளர் பிரபாகரன், BMS பொதுச்செயலாளர் சாமிதாஸ், கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் அன்பழகன் மற்றும் அலிபாய் மேலும்  வால்பாறை மக்கள் இயக்கம் நண்பர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழக துணை தலைமை நிருபர்,

-M.சுரேஷ்குமார்.

Comments