கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்டவர் கைது!!

      -MMH 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் சுகுமாருக்கு தகவல் கிடைத்தது அதையடுத்து அவா் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அண்ணா பேருந்து நிலையம் அருகே சந்தேகத்துக்குரிய இடத்தில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து சோதனையிட்டனர்.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அப்போது, அவா் போலீசாரை அவதூறாகப் பேசி மிரட்டினாராம். தொடா்ந்து போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஸ்ரீராம் நகரைச் சேர்ந்த யா. அந்தோணிசாமி (56) என்பது தெரியவந்தது. மேலும், அவா் வைத்திருந்த ஒரு நோட்டை கைப்பற்றி ஆய்வு செய்த போது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கணினி லாட்டரி சீட்டு மூலம் குழுக்கள் செய்வதற்குரிய எண்கள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து, அந்தோணிசாமியை  கைது செய்தனா்.

தமிழ் நாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் லாட்டரி சீட்டு விற்பனையை தடை செய்தார். ஏழை எளிய மக்களின் வாழ்க்கை நிலை கருத்தில் கொண்டு இந்த முடிவு செய்யப்பட்டது.  ஆனால் தமிழ் நாட்டில் மறைமுகமாக 3 நம்பர் லாட்டரி சீட்டு அமோக விற்பனை நடைபெறுகிறது.  

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.

Comments