"ஓபிஎஸ்சை அதிமுகவில் இணைத்து கொள்வோம்! ஆனால்.." கடம்பூர் ராஜுவின் நிபந்தனை!!

     -MMH 

ஒற்றைத்தலைமை இபிஎஸ் தான் என ஏற்றுக்கொண்டால் ஓபிஎஸ்சை அதிமுகவில் இணைத்து கொள்வோம் என கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். 

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை வரவேற்று தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை கழுகாசலம் மூர்த்தி திருக்கோவிலில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ சாமி தரிசனம் செய்து பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். 

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த தீர்ப்பை பார்த்து ஆச்சரியப்படுவது ஒன்றுமில்லை இது நியாயத்தின் தீர்ப்பு. நீதிமன்றமாக இருந்தாலும் சரி தேர்தல் ஆணையம் இருந்தாலும் சரி எங்கு சென்றாலும் மெஜாரிட்டியாக யார் பக்கம் இருக்கிறதோ அவர்கள் மட்டும்தான் வெற்றி பக்கம் தான் நீதி இருக்கும். 

ஒற்றைத் தலைமை தான் என்று முடிவை ஏற்றுக்கொண்டு வந்தால் இணைத்துக் கொள்ள தயார் ஆனால் ஒற்றைத் தலைமை என்பது முடிவு மாற்று கருத்து இல்லை. அதிமுக தலைமை எங்கே இருக்கின்றதோ அங்க தான் அதிமுக இருக்கும் தொண்டர்கள் இருப்பார்கள் தொண்டர்களும் தலைமையும் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் இருக்கிறது நாங்கள் வலுவாக இருக்கிறோம்

எடப்பாடி பழனிச்சாமி தலைமையை ஏற்று பிரிந்து சென்றவர்கள் திரும்ப வந்தால் இணைத்து கொள்வோம் தற்போது இடைக்கால பொதுச் செயலாளராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி நிரந்தர பொதுச் செயலாளர் ஆவார்.

உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது அரசியல் கட்சி நடைமுறையில் தலையிட முடியாது என உச்ச நீதிமன்றமே உயர்நீதிமன்றத்திற்கு திருப்பி விட்டது. நாங்க எதை பார்த்து பயப்படவில்லை 98 சதவீதம் பேர் எங்கள் பக்கம் உள்ளார்கள் 2 சதவீதம் உள்ளவர்களை பார்த்து நாங்கள் ஏன் பயப்பட வேண்டும். இன்று ஒரு சட்டமன்ற உறுப்பினர்கள் போயிருக்கலாம். ஆனால் அங்கு 4 பேர் தான் இருக்கலாம் அவர்கள் கூட திரும்ப எங்களுடன் வந்து இணையலாம். 

தமிழகத்தில் யாரும் வளர முடியாது தமிழகத்தில் பெரிய இயக்கமாக அதிமுகவில் உள்ளது எத்தனையோ பிளவுகளை அதிமுக பார்த்து உள்ளோம் இது ஒன்றும் புதிதல்ல. 

பொறுப்பில் உள்ளவர்கள் நிர்வாகிகள் அணி மாறலாம் ஆனால் அதிமுகவை பொருத்தவரை அதிமுகவின் ஆணிவேர் தொண்டர்கள் தான் தொண்டர்கள் இருக்கும் வரை இந்த இயக்கத்தை யாரும் அசைக்க முடியாது சசிகலா ,டிடிவி தினகரன் அதிமுகவில் இணைத்துக் கொள்வது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஒற்றைத் தலைமை வந்தவுடன் இது குறித்து முடிவெடுப்போம் என்று கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.

Comments