சிறுபான்மையின மாணவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை அறிவிப்பு!!

சிறுபான்மையின மாணவ - மாணவியர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க 31ம் தேதி வரை அறிவிப்பு. இது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு : தமிழ்நாட்டில் வசிக்கும் இசுலாமியர், கிறித்துவர், சீக்கியர், பார்சி, ஜெயின் மற்றும் புத்த மதத்தை சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-23-ஆம் கல்வியாண்டில் பள்ளி படிப்பு (ஒன்றாம்வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை),

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பள்ளி மேற்படிப்பு (11-ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை) மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி (தொழிற்கல்வி/ தொழில்நுட்பக்கல்வி) பயிலும் மாணவ/மாணவியர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு கால அவகாசம் 31-10-2022 வரை, மத்திய அரசு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேற்படி, கல்வி உதவித்தொகை திட்டத்தில் தகுதியுள்ள சிறுபான்மை மாணவ/மாணவியர் www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே 31-10-2022 -க்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்.
https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

தேவையான ஆவணங்கள் :
பள்ளி கல்லூரி மாணவர்கள் மார்க் சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ் ஆதார் அட்டை வாங்கி புத்தகம் ஆகியவற்றை ஆன்லைன் பதிவு செய்ய தேவையான ஆவணங்கள். நாளைய வரலாறு செய்திகளுக்காக, -முனியசாமி, ஓட்டப்பிடாரம்.

Comments