கோட்டூர் அருகே காலி குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்!!

கோட்டூர் மங்கமாமில் பகுதிகளிலுள்ள வீடுகளில் ஒரு சிலர் குடிதண்ணீரை மோட்டார் வைத்து அதிகமாக உறிஞ்சிக் கொள்வதால் மோட்டார் பயன்படுத்தாதவர்களுக்கு வீடுகளிலுள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் சரியாக வருவதில்லை. 

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனால் பொதுமக்களுக்கு தண்ணீர் பிரச்சனை ஏற்படுகிறது என பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி அப்பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவர் தலைமையில் பொதுமக்கள் ஒன்றிணைந்து காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து விரைந்து வந்த கோட்டூர் காவல் நிலைய போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் பேரூராட்சி தலைவர் பகுதியைச் சேர்ந்த வார்டு உறுப்பினர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதில் சுமுக நிலை ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு விட்டு சென்றனர்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

நாளைய வரலாறு செய்திக்காக,

-அலாவுதீன், ஆனைமலை.

Comments