கண்டெய்னர் லாரியில் மோதி இளைஞர் பலி!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் விம்கோ நகர் பகுதியில் ஐசக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருபாகரன்(21) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். 

இந்நிலையில் கிருபாகரன் தனது நண்பரான ஜீவா(19) என்பவருடன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அவர்கள் திருவொற்றியூர் ஜோதி நகர் அருகே சென்றபோது வேகமாக வந்த கண்டெய்னர் லாரி மோட்டார் சைக்கிளின் பின்புறம் பயங்கரமாக மோதியது.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த பிரபாகரன் கண்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். ஜீவா அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினார். 

இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று கிருபாகரனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அப்போது பயணி ஒருவர் தீவுதிடல் நிறுத்தத்தில் இறங்குவதற்கு டிக்கெட் எடுத்துள்ளார். ஆனால் அந்த நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் போர் நினைவு சின்னம் அருகே சிக்னலில் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியுள்ளார். பின்னர் அந்த பயணியை கீழே இறங்கச் சொன்னதாக கூறப்படுகிறது.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

இதனால் கோபமடைந்த பயணி பேருந்து ஓட்டுனர் மற்றும் கண்டக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறியதால் அந்த பயணி பேருந்து ஓட்டுனரை சரமாரியாக தாக்கியுள்ளார். 

இதனை அடுத்து ஓட்டுனரும், கண்டக்டரும் அந்த பயணியை போலீசாரிடம் பிடித்து ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

-கார்த்திக், தண்டையார்பேட்டை.

Comments