இ-மெயில் சேவை நிறுத்தம்! பி.எஸ்.என்.எல். அறிவிப்பு!!

பி.எஸ்.என்.எல்., நிறுவனம் வர்த்தக ரீதியிலும், மதிப்பு கூட்டு சேவையாகவும் வாடிக்கையாளர்ளுக்கு வழங்கி வந்த 'இ - மெயில்' சேவையை, அக். 31ம் தேதி முதல் நிறுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜி மெயில், யாஹூ' என பல்வேறு இ - மெயில் சேவைகளை, பன்னாட்டு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதேபோல, மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்., சார்பிலும், dtat1.in, bsnl.in உட்பட சில இ - மெயில் சேவைகள், வர்த்தக ரீதியிலும், மதிப்பு கூட்டு சேவையாகவும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்தன. இந்த சேவைகளுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு இல்லாததால், அவற்றை நிறுத்த, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் முடிவு செய்துள்ளது

இதுகுறித்து, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியதாவது: பி.எஸ்.என்.எல்., 'பிராட்பேண்ட்' சேவை பெறும் வாடிக்கையாளர்களுக்கு, மதிப்பு கூட்டு சேவையாக இ - மெயில் மற்றும் 'இ - மெயில் பாக்ஸ்' சேவை வழங்கப்பட்டு வந்தது. இந்த சேவை, 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது

தற்போது, பி.எஸ்.என்.எல்., இ - மெயில் சேவைக்கான தேவை, வாடிக்கையாளர்களிடம் குறைந்துள்ளது. அதனால், இந்த சேவையை நிறுத்துவதற்கு பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

ஆனால், அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை. மேலும், இ - மெயில் சேவைக்கான செலவை குறைப்பதற்காகவும், இந்த நடவடிக்கையை பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப், கோவை.

Comments