கஞ்சா செடி வளர்த்தவர் கைது!!
கோவை ஒக்கிலிபாளையம் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பதாக, செட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இத்தகவுளின் செட்டிபாளையம் போலீசார் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். இதில் வெள்ளாளர் காலனி, நான்காவது வீதியிலுள்ள ஒரு வீட்டில் கஞ்சா வளர்ப்பது தெரிந்தது.
அவ்வீட்டிற்கு சென்ற போலீசார், வீட்டின் பின்புறம் வளர்க்கப்பட்டிருந்த, 1.6 கி.கிராம் எடையுள்ள ஐந்தரை அடி உயர செடியை அழித்தனர்.செடியை வளர்த்த, அவ்வீட்டில் வசிக்கும் கூலி தொழிலாளி முத்துபாண்டி, 50 என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-அருண்குமார், கிணத்துக்கடவு.
Comments