கிணற்றில் முதியவர் பிணம்!! போலீஸ் விசாரணை!!

-MMH 

நெகமம் அடுத்த கோப்பனூர்புதூரை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 65).

இவரது மகன் கோகுல் பிரசாந்த் சோமசுந்தரம் கடந்த 23-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. தன் தந்தையை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் கோகுல்பிரசாத் நெகமம் போலீசில் புகார் செய்தார்.

கோகுல் பிரசாத் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சோமசுந்தரத்தை பல இடங்களில் தேடி வந்தனர் இந்தநிலையில் நேற்று முன்தினம் கோப்பனூர்புதூர் அருகே சென்னாம்பாறை தோட்டத்தில் உள்ள கிணற்றில் சோமசுந்தரம் பிணமாக  கிடப்பது தெரிய வந்தது.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் நெகமம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சோமசுந்தரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

சோமசுந்தரம் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் கொலை செய்தார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments