பாலியல் தொல்லை: தாளாளர் புழல் சிறையில் அடைப்பபு !!

சென்னை: சென்னை ஆவடி அடுத்த திருநின்றவூரில் ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இதில் 2000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளி தாளாளர் வினோத், 38, 'கவுன்சிலிங்' என்ற பெயரில் பிளஸ் 2 மாணவியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். 

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மாணவர்கள் வினோத்தை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இதனையடுத்து வினோத் மீது 'போக்சோ' சட்டம், கல்வி நிலையத்தில் தொந்தரவு கொடுத்தல் உள்ளிட்ட நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

கோவாவில் தலைமறைவாக இருந்த வினோத்தை தனிப்படை போலீசார் கைது செய்து திருவள்ளூர் மகிளா நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். அதில் தாளாளர் வினோத்தை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ருக்மாங்கதன்.வ , வட சென்னை.

Comments