மேட்டுப்பாளையம் வனப்பத்திர காளியம்மன் கோவில் அறங்காவலர் மீது புகார்! முதலமைச்சருக்கு மனு!!

 

   -MMH 

மேட்டுப்பாளையம் வனப்பத்திர காளியம்மன் கோவில் அறங்காவலர் மீது புகார்! முதலமைச்சருக்கு மனு!!

   மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலின் வளர்ச்சிப் பணிகள், பரம்பரை அறங்காவலரின் நிர்வாக சீர்கேட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக, தேக்கம்பட்டி 23 கிராம விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு சார்பில், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில், அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ளது.

பரம்பரை அறங்காவலராக வசந்தா உள்ளார். இவர், ஆதாய நோக்கில் செயல்படுகிறார். கோவில் தல வரலாறு புத்தகம் 15 ஆண்டுகளாக விற்பனை செய்யாததால், பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவர் சரியாக செயல்படாததால், ராஜகோபுர திருப்பணி பாதியில் நிற்கிறது. காலியாக உள்ள பூசாரி அலுவலக ஊழியர் பணியிடங்களுக்கு, நிரந்தர பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை.


https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru


தகுதியற்றவர்களை, சட்டத்துக்குப் புறம்பாக, தற்காலிக அடிப்படையில் நியமித்துள்ளார். கோவில் பணியாளர்களை பழிவாங்கும் விதத்தில், அவர்கள் மீதான புகார்களை உடனே விசாரிக்காமல், பணி ஓய்வின்போது, ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட பணப்பயன்களை நிறுத்தி வைத்துள்ளார். இதுதொடர்பாக, பரம்பரை அறங்காவலர் மீது புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

எனவே, முதல்வர், அறநிலையத்துறை அமைச்சர் தலையிட்டு, வசந்தா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.      

புகார் தொடர்பாக, அறங்காவலர் வசந்தாவிடம் கேட்டபோது, "என் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை. ராஜகோபுர பணி தடைபட, கோவில் உதவி கமிஷனர்கள்தான் காரணம்.

ராஜகோபுரம் கட்ட துவங்கியபோது, ஜி. எஸ். டி. , இல்லை. அதன் பிறகு ஜி. எஸ். டி. , வந்ததால், அந்தத் தொகையை, கோவில் நிர்வாகம்தான் வழங்கவேண்டும். அந்தத் தொகையை வழங்காததால், ஒப்பந்ததாரர் வழக்குத் தொடர்ந்துள்ளார். ராஜகோபுர பணிகளை மீண்டும் துவக்க தீர்மானம் நிறைவேற்றி, ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் மற்றும் அரசுக்கு பலமுறை அனுப்பப்பட்டுள்ளது.

அரசின் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. காலிப் பணியிடங்களை நிரப்ப, விதிமுறைப்படி, 35 வயதுக்கு உட்பட்டவர்களை விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டது. விண்ணப்பங்கள் பெறப்பட்ட பிறகு, வயது வரம்பு 45 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இவ்வாறு, வசந்தா தெரிவித்தார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர்

-சி.ராஜேந்திரன்.

Comments