இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பண்ட் கார் விபத்து! காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி!.

 

   -MMH 

இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பண்ட் கார் விபத்து. காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி!.

  புதுடெல்லி: இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பந்த் வீடு திரும்பும் போது ரூர்க்கி அருகே டெல்லி-டெஹாராடூன் நெடுஞ்சாலையில் கார் விபத்தில் காயமடைந்தார்.



சமீபத்திய தகவல்களின்படி, அவர் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் மற்றும் அவரது நெற்றியில், முதுகு மற்றும் கால்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.


"நாங்கள் தகவல் அறிந்தவுடன் மருத்துவமனைக்குச் செல்கிறோம். ரிஷப் ஒரு போராளி, அவர் இதை விரைவில் சமாளிப்பார்" என்று அவரது சகோதரி ராக்ஷி பண்ட் கூறினார்.


வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த ரிஷப் பண்ட் எதிர்பாராத விதமாக கார் விபத்தில் சிக்கியுள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் ரிஷப் பண்ட் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. இதில், ரிஷப் பண்ட் நெற்றிப் பகுதி, முதுக்குப் பகுதி ஆகிய இடங்களில் பலத்த காயத்துடன் ரூர்க்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காரை தான் இயக்கியிருந்தார என்று தகவல் ஏதும் இதுவரை இல்லை.



நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-மு. ஹரி சங்கர், கோவை வடக்கு.



Comments