அனுமதியின்றி நள்ளிரவு காட்சி!! 8 தியேட்டர்களுக்கு நோட்டீஸ்!!!

-MMH

கோவை  மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி நடிகர் அஜித் நடித்த துணிவு, நடிகர் விஜய் நடித்த வாரிசு ஆகிய திரைப்படங்கள் கடந்த 11-ந் தேதி வெளியானது.

இந்த திரைப்படங்களை சிறப்பு காட்சியாக வெளியிட தியேட்டர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

ஆனால் கோவையில் உள்ள சில தியேட்டர்களில் எவ்வித அனுமதியும் பெறாமல் அதிகாலை 1 மணி மற்றும் அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டன.

இதனால் அனுமதி இன்றி சிறப்பு காட்சி திரையிட்ட கோவை கே.ஜி., சாந்தி, கற்பகம் காம்ப்ளக்ஸ், வேல் முருகன், அர்ச்சனா, தர்ச்சனா, அரசன், செந்தில் குமரன் ஆகிய 8 தியேட்டர்களுக்கு விளக்கம் கேட்டு கலெக்டர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

15 நாட்களுக்குள் தியேட்டர் நிர்வாகங்கள் கொடுக்கும் விளக்கத்துக்கேற்ப, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments