கஞ்சாவை கடத்திய தொழிலாளி கைது!!


 கஞ்சாவை கடத்திய தொழிலாளி கைது!!

  காரமடை அருகே அன்னூர் நால்ரோடு பகுதியில் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் சப்- இன்ஸ்பெக்டர் சுல்தான் இப்ராஹீம் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுப்பட்டு வந்தனர்.

அப்போது அந்தவழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அண்ணா காலனியை சேர்ந்த ரகுநாதன் (வயது40) என்பவரை சோதனை செய்தனர் .கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து ரகுநாதனை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 3 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments