ஒட்டப்பிடாரத்தில் குடும்ப அட்டை குறைதீர் சிறப்பு முகாம்!!!
பொது விநியோகத்திட்டம் சிறப்பாக நடைபெற, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படி நேற்று 11.02.2023 ஒட்டப்பிடாரம் வட்டாச்சியர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை புதிய குடும்ப அட்டை தொடர்பான குறைதீர் சிறப்பு முகாம் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் நிஷாந்தினி தலைமையில் நடைபெற்றது.
வட்ட வழங்கல் அதிகாரி கருப்பசாமி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
மேலும் இம்முகாமில் பொது விநியோகத்திட்டம் தொடர்பான குறைகளையும் பொதுமக்கள் பயன்பெற்றுக் கொள்ளலாம்.
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.
Comments