சுற்றுச்சூழல் மாசை கட்டுப்படுத்தும் இயற்கை எரிவாயு பேருந்துகள்!!

 

   -MMH

சுற்றுச்சூழல் மாசை கட்டுப்படுத்தும் இயற்கை எரிவாயு பேருந்துகள்!! இயற்கை எரிவாயு என்ஜின்களாக மாற்றம்!!! இந்திய அரசின் ஐசிஏடி அங்கீகாரம் பெற்று பயன்படுத்தப்படுகிறது.

தமிழ்நாடு அரசின் ஒப்புதலோடு சிஎன்ஜி இயற்கை எரிவாயு நிரப்பும் மையத்தை துவக்கியுள்ள விஜய் ஆயில் அண்ட் கேஸ் நிறுவனத்துடன் இணைந்து திருமலா மில்க் புராடாக்ட் 18 வாகனங்களுக்கு இயற்கை எரிவாயு கருவிகளை பொருத்தியுள்ளது. பசுமை புரட்சியின் மற்றுமொரு அங்கமாக வாகனங்களை இயற்கை எரிவாயுவில் இயக்கி கார்பனை குறைக்க முடிவு செய்துள்ளோம்.

முன்பு இந்த வாகனங்கள் அனைத்தும் டீசல் இன்ஜின்களைக் கொண்டிருந்தது. பரிசோதனை திட்டமாக கோவை - பெங்களுரு இடையே இயங்கும் காண்டி டிராவல்ஸ், பொள்ளாச்சி, காங்கேயம் இடையே இயங்கும் கேபிடி மொபசல் பஸ் போன்றவை சிஎன்ஜிக்கு விஜய் ஆயில் அன்ட் கேஸ் நிறுவனம் மாற்றியது. இதன் வெற்றிக்கு பின், 20 எய்சர் இன்ஜின் கொண்ட பால் டிரக்குகளை சிஎன்ஜிக்கு மாற்றியது. இந்த நிறுவனம், 100 டன் திறன் வரை 407 பிக் அப் வாகனங்களை சிஎன்ஜிக்கு மாற்ற அங்கீகாரம் பெற்றுள்ளது. இதில் டாடா மஹிந்திரா, எய்ச்சர், பாரத் பென்ஸ் மற்றும் அசோக் லேலாண்ட் நிறுவனங்களின் வாகனங்களின் இன்ஜின்களை சிஎன்ஜிக்கு மாற்ற அனுமதி பெற்றுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


வாகனத்தில் நிரப்பப்பட்டுள்ள எரிபொருள் அளவு குறித்த குறுஞ்செய்தி டிரைவருக்கு அவ்வப்போது கிடைக்கும். அதோடு ஏதாவது எரிபொருள் வீணாகிறதா என்பது பற்றியும் இதில் இருக்கும். இதற்கென ஜியோலட் கிட், இந்திய அரசின் ஐசிஏடி அங்கீகாரம் பெற்று பயன் படுத்தப் படுகிறது. தூய்மையான, பசுமையான சூழலை உருவாக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம். சிஎன்ஜி எரிவாயு பயன்படுத்துவதால் இன்ஜின் மற்றும் இன்ஜின் ஆயில் ஆயுள் காலம் மற்றும் திறனும் அதிகரிக்கிறது. இந்த முயற்சியால் எதிர்காலத்தில் ஒரு பசுமையான, தூய்மையான சுற்றுச்சூழலை உருவாக்க முடியும் என நம்புகிறோம்.


இந்த வகையில் திருப்பூர் முதல் முறையாக ஒரு சிஎன்ஜி பஸ்சை பெறுகிறது. இதற்கான துவக்க விழா செங்கப்பள்ளியில் உள்ள ஐஓசிஎல் கோகோ பம்ப்பில் நடந்தது. தலைமை விருந்தினராக திருமலா மில்க் புராடாக்ட்ஸ் விநியோகத்தொடர் இயக்குனர் அருண் செல்வக்குமார் பங்கேற்றார்.

கடந்த 2021ம் ஆண்டு நடந்த கிளாஸ்கவ் மாநாட்டின்போது, இந்தியா 2070-க்குள் புகையில்லா வாகனங்களைக் கொண்டிருக்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. 2030க்குள் சுற்றுச்சூழல் பாதிப்பை 45 சதவீதம் குறைக்க திட்டமிட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் சிஎன்ஜி பயன்படுத்தப்படும் வணிக வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. அரசின் இந்த திட்டத்திற்கு உறுதுணையாக நிற்போம்.

விழாவில் கோயம்புத்தூர், இந்தியன் ஆயில் நிறுவனத்தின், பொது மேலாளர் மாதவன், சில்லறை விற்பனை, முதுநிலை மேலாளர், பிரியா பழனி, அதானி குழுமத்தின், முது நிலை துணைத் தலைவர், ராஜேஷ் பிரபு மற்றும் விஜய் கேஸ் சர்வீஸ், நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சஞ்சய், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பொது மேலாளர் ஆதவன் உட்பட மேலும் பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர்

-சி.ராஜேந்திரன்.

Comments