கோவில்பட்டியில் 133 அடியில் முருகன் சிலை கடம்பூர் ராஜூ!!

 -MMH

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் விழா கோவில்பட்டியில் நடைபெற்றது. அதற்கு  முன்னதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர்  புதிய உறுப்பினர்களுக்கு  அட்டையை  தூத்துக்குடி    வடக்கு மாவட்டச் செயலர்  கோவில்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அவர்கள்  வழங்கினார்.

செய்தியாளர்களிடம் பேசுகையில், "பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணியில் எந்த  விரிசலும் இல்லை. கூட்டணியில் எவ்வித மாற்றமும் இல்லை. அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மறைவுக்குப் பின், அவர்களது இடத்தில் எடப்பாடி பழனிசாமியை பார்க்கிறோம். பா.ஜ.க. சார்பில் கோவில்பட்டியில் விரும்பத்தகாத சம்பவம் நடந்தது. 

இதற்காக பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள் வருத்தத்தை தெரிவித்தனர். விரும்பத்தகாத சம்பவத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க தெரிவித்தோம்.

கோவில்பட்டியில் இந்து அறநிலையத்துறை சார்பில் ரூ.2 கோடியில் திருமண மண்டபம் கட்டும் பணி மற்றும் சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவிலில் 133 அடியில் முருகன் சிலை அமைக்கும் பணிகளுக்கு கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது.

அந்த பணிகளை விரைவில் தொடங்க உயர் அதிகாரிகளை சந்தித்து பேசினேன். விரைவில் அதற்கு அனுமதி தருகிறோம் என அதிகாரிகள் கூறியுள்ளனர். மொத்தத்தில் தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை மட்டுமல்ல கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள், அரசாணைகளை கூட செயல்படுத்தவில்லை. 

இந்த நிகழ்வுகளில்   ஓட்டப்பிடாரம் முன்னாள்  சட்ட மன்ற      மோகன், விளாத்திகுளம் முன்னாள் சட்ட மன்ற  சின்னப்பன், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சத்யா, நகரச் செயலர் விஜயபாண்டியன்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Comments