கோவை தி சம்ஹிதா அகாடமி பள்ளியின் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது..

 

-MMH

போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து கோவையில் பல்வேறு தரப்பினர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் கோவை தி சம்ஹிதா அகாடமி பள்ளி சார்பாக போதை பொருளால் ஏற்படும் தீமைகள்  குறித்த விழிப்புணர்வு பேரணி மலுமிச்சம்பட்டி,SPT மைதானத்தில் நடைபெற்றது.. பேரணியை  மலுமிச்சம்பட்டி ஊராட்சி பஞ்சாயத்து துணைத்தலைவர் சதிஷ் மற்றும் பள்ளியின் முதல்வர் புஷ்பஜா ஆகியோர்  கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இப்பேரணியில்மாணவர்கள்,ஆசிரியர்கள்,அலுவலர்கள், பள்ளிஉதவியாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் என கலந்து கொண்ட  அனைவரும் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டு விழிப்புணர்வு பதாகைகளுடன் கலந்து கொண்டனர். பேரணியின் முடிவில் மலுமிச்சம்பட்டி ஊராட்சி பஞ்சாயத்து துணைத்தலைவர் சதிஷ்   போதைப் பொருள் துஷ்பிரயோகத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியைப் பாராட்டிப் பேசினார். தி சம்ஹிதா அகாடமி பள்ளி மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்துப் பேசினர்.நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செட்டிப்பாளையம் காவல் நிலையத்தினர் செய்திருந்தனர்.

-சீனி போத்தனூர்.

Comments