அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி!!

   -MMH

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி!!

  கோவை தெலுங்குபாளையம் ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் 30 வயதான காயத்ரி. இவர் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கு துடியலூர் அப்ப நாயக்கன் பாளையத்தை சேர்ந்த தம்பதிகளான 29 வயதான பிரசன்னா, அவரது மனைவி 28 வயதான நிரஞ்சனா ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் 2 பேரும் காயத்ரியிடம் சென்னையில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் எங்களுக்கு நன்கு தெரிந்த ஒருவர் அதிகாரியாக வேலை பார்க்கிறார். அங்கு நீங்கள் பதிவு செய்து விட்டால் அவர் மூலமாக அரசு வேலை வாங்கி தருகிறோம். நீங்கள் எந்த வித தேர்வையும் எழுத வேண்டியதில்லை. எளிதாக வேலை பெற முடியும் என ஆசை வார்த்தை கூறினர். 

இதனை உண்மை என நம்பிய காயத்ரி தனக்கு தெரிந்த மேலும் சிலரையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ளார். பின்னர் காயத்ரி உட்பட மொத்தமாக 10 பேரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 23. 95 லட்சம் பணத்தை நிரஞ்சனா பெற்றார். ஆனால் அவர் கூறியபடி வேலை வாங்கி தரவில்லை. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


இது குறித்து காயத்ரி செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து பண மோசடியில் ஈடுபட்ட நிரஞ்சனாவை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் பிரசன்னா மீதும் வழக்குப் பதிவு செய்து அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்

-சி.ராஜேந்திரன்.

Comments