கட்டுமான நிறுவனத்தில் வடமாநில தொழிலாளியை தாக்கிய சிறுவன்! சீர்திருத்த பள்ளியில் அடைப்பு !!

  -MMH

கட்டுமான நிறுவனத்தில்  வடமாநில தொழிலாளியை தாக்கிய சிறுவன்! 
சீர்திருத்த பள்ளியில் அடைப்பு !!

  சிதம்பரத்தை சேர்ந்தவர் புகழேந்தி இவர் கோவை வெள்ளலூரில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் மேஸ்திரியாக வேலை பார்த்து வருகிறார், இவரிடம் பீகார் மாநிலத்தை சேர்ந்த பிந்துகுமார் உள்பட 84 வட மாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த நிலையில் நேற்று கட்டுமான நிறுவனத்தின் காவலாளி பிந்து குமாரை காவலாளி அறையில் இருக்க வைத்து விட்டு ரோந்து சென்றுள்ளார். அப்போது அதே கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்க்கும் 17 வயது சிறுவன் வெளியே சென்று விட்டு குடிபோதையில் அறைக்கு சென்றுள்ளார். அப்போது காவலாளி அறையில் இருந்த பிந்துகுமார் இந்தியில் அவரை விசாரித்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த சிறுவன் தான் வைத்து இருந்த பீர் பாட்டிலால் வடமாநில தொழிலாளியை தாக்கினார். இதனை தடுக்க முயன்ற போது பிந்துகுமாரின் கையில் காயம் ஏற்பட்டது. பின்னர் சிறுவன் தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார். 

இது குறித்து வடமாநில தொழிலாளர்கள் மேஸ்திரி புகழேந்திக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக நிறுவனத்துக்கு விரைந்து சென்று பிந்துகுமாரை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் இது குறித்து போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வடமாநில தொழிலாளியை தாக்கிய 17 வயது சிறுவனை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்

-சி.ராஜேந்திரன்.

Comments