வங்கியில் கடன் பெற்று தருவதாக கூறி பெண்ணிடம் நூதன முறையில் நகையை பறித்துச் சென்ற நபர்!!

 
  -MMH

வங்கியில் கடன் பெற்று தருவதாக கூறி பெண்ணிடம் நூதன முறையில்  நகையை பறித்துச் சென்ற நபர்!!

  கோவை மாவட்டம் பீளமேடு அடுத்த ஏடி காலனி பகுதியைச் சேர்ந்தவர் 50 வயதான குணசெல்வி. இவர் அவிநாசி சாலை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் பணியாற்றி வருகின்றார்.

இவரிடம் நைசாக பேசிய மர்மநபர் ஒருவர் உங்களுக்கு தனிநபர் கடன் முண்ணனி வங்கியில் வாங்கித் தருவதாக கூறி அவரை  அழைத்து சென்றுள்ளார். மேலும் வங்கியில் நீங்கள் நகை அணிந்து வந்து கடன் கேட்டால், உங்களுக்கு தனிநபர் கடன் கிடைக்காது என்று கூறிய அவர் குணசெல்வி அணிந்திருந்த நான்கு சவரன் தங்க நகைகளை வாங்கி பேப்பரில் மடித்து கொடுப்பது போல் அவரிடம் கொடுத்துள்ளார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


இந்த நிலையில் குணசெல்வியை வங்கியில் காத்திருக்குமாறு கூறி சென்ற அவர் மீண்டும் வரவில்லை எனக் கூறப்படுகின்றது. சற்று நேரம் கழித்து அவர் மடித்துக் கொடுத்த காகிதத்தைப் பிரித்து பார்க்கும் பொழுது அதில் தங்க நகை இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து இது குறித்து பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்

-சி.ராஜேந்திரன்.

Comments