தொடரும் வழிப்பறி தூத்துக்குடி திருச்செந்தூர் பைபாஸ் துறைமுகம் சாலையில் லாரி டிரைவர்கள் பெரும் அச்சம்!!

 

    -MMH

தொடரும் வழிப்பறி தூத்துக்குடி திருச்செந்தூர் பைபாஸ் துறைமுகம் சாலையில் லாரி டிரைவர்கள் பெரும் அச்சம்.

  தூத்துக்குடியில் லாரி டிரைவரை தாக்கி பணம், செல்போன் பறிப்பு .ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் டிப்பான் யாதவ் மகன் பிக்கி யாதவ் (39), லாரி டிரைவர். இவர் அரியலூரில் இருந்து லாரியில் சிமென்ட் லோடு ஏற்றிக் கொண்டு தூத்துக்குடி வந்துள்ளார். நேற்று இரவு 9.45 மணியளவில் துறைமுகம் -திருச்செந்தூர் பைபாஸ் சாலையோரத்தில் லாரியை நிறுத்திவிட்டு டீ குடிக்கச் சென்றுள்ளார். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அப்போது ஒரே பைக்கில் வந்த 3பேர் அவரை வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.13ஆயிரம் ரொக்கப் பணம்,  ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துச் சென்றுவிட்டனர். இதுகுறித்து பிக்கி யாதவ் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக

ஶ்ரீவைகுண்டம் நிருபர்                                                                                                                        -முத்தரசு கோபி.

Comments