மாணவர்களுக்கு கல்வி உதவி திட்டம் துவக்க விழா மற்றும் சி ஆர் எஸ் விழுந்து வழங்கும் விழா!!

 
  -MMH

மாணவர்களுக்கு கல்வி உதவி திட்டம் துவக்க விழா மற்றும் சி ஆர் எஸ் விழுந்து வழங்கும் விழா!!

  கோவை வர்த்தக மற்றும் தொழில் துறை சங்கங்கள் மற்றும் சி ஆர் எஸ் நினைவார கட்டளை சார்பாக மாணவர்களுக்கு கல்வி உதவி திட்டம் துவக்க விழா மற்றும் சி ஆர் எஸ் விழுந்து வழங்கும் விழா ஏப்ரல் ஒன்றாம் தேதி நடைபெற உள்ளது. 

சி ஆர் சுவாமிநாதன் பல ஆண்டுகளாக ஏழை எளிய மாணவர்களின் முன்னேற்றத்திற்காகவும் அவர்களின் கல்விக்காகவும் தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வந்தவர் ஆவார். அவரது நினைவை போற்றும் வகையில் பள்ளிக்கல்வி முதல் முதல் நிலை கல்வி வரையிலான நீண்ட கால கல்வி உதவித் தொகை மற்றும் வழிகாட்டு திட்டம் கோவை வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கங்கள் மற்றும் சி ஆர் எஸ் நினைவு அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இது குறித்தான செய்தியாளர் சந்திப்பு கொடிசியாவில் ஆக்கத்தில் நடைபெற்றது இதில் செய்தியாளர்களை சந்தித்த அறக்கட்டளையினர், முதல் கட்டமாக இவ்வருடம் இத்திட்டத்தின் கீழ் 5 மாணவர்கள் பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி முதல் முதல் நிலை படிப்பு வரை கல்வி உதவித் தொகையை அளிக்கப்படும் எனவும் அதுமட்டுமின்றி அவர்கள் தொடர்ந்து சிறப்பாக படித்திட உதவியாகவும் ஊக்கமளிக்கும் வகையிலும் ஒவ்வொரு மாணவருக்கும் பள்ளி முதல் கல்லூரி வரை ஒரு வழிகாட்டியும் உடனிருந்து வழிகாட்டுவார் என தெரிவிக்கப்பட்டது. 

ஏப்ரல் 1ஆம் தேதி நடைபெறும் இவ்விழாவின் போது மற்றொரு இணை நிகழ்வாக சிறந்த நிறுவன உருவாக்கத்திற்கான சி ஆர் எஸ் விருது சோகோ நிறுவனத்தின் ஸ்ரீதர் வேம்பு அவருக்கு வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

-சீனி, போத்தனூர்.

Comments