ஜிட்டோ பெண்கள் அமைப்பினர் ஒருங்கிணைத்த அஹிம்சா மாரத்தான் நடைபெற்றது!!

 -MMH

ஜிட்டோ  பெண்கள் அமைப்பினர்  ஒருங்கிணைத்த அஹிம்சா  மாரத்தான்  நடைபெற்றது!!

  உலக அமைதியை வலியுறுத்தியும்,வன்முறையை எதிர்த்தும் கோவையில் ஜிட்டோ  பெண்கள் அமைப்பினர்  ஒருங்கிணைத்த அஹிம்சா  மாரத்தான்  நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

உலகம் முழுவதும் 22 நாடுகளிலும் இந்தியாவில் 65-க்கும் மேற்பட்ட  நகரங்களிலும் கின்னஸ் உலக சாதனை நிகழ்வாக  அஹிம்சா மராத்தான்  நடைபெற்றது.இதன் ஒரு பகுதியாக,கோவையில்பெண்களுக்கான எதிரான வன்முறைக்கு எதிராகவும்,அமைதியை வலியுறுத்தியும் அஹம்சா மாரத்தான்  நடைபெற்றது.

முழுவதும் பெண்கள் ஒருங்கிணைத்த இந்த போட்டிகளை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி,மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் துவக்கி வைத்தனர்.


மூன்று, ஐந்து,பத்து கிலோ மீட்டர் என மூன்று பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில், இந்திய தரைப்படை, கப்பல் படை, விமானப் படை ஆகிய முப்படைகளைச் சேர்ந்த இராணுவத்தினர், காவல் துறையினர் உட்பட,வயது வித்தியாசம், ஜாதி மதம் ஆண் பெண் என்று எந்தவித வித்தியாசமும் இன்றி ஆயிரக்கணக்கான மக்கள் இதில் பங்கேற்றனர்..கோவையில் நடைபெற்ற ஜிட்டோ அகிம்சா ஓட்டமானது கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றது, குறிப்பிடத்தக்கது.

-சீனி, போத்தனூர்.

Comments