பொள்ளாச்சியில் பரபரப்பு!! அரசு பள்ளி மாணவர்கள் 18 பேருக்கு வாந்தி மயக்கம்!! கோட்டூர் அரசு மருத்துவமனையில் மாணவர்களுக்கு சிகிச்சை!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை ஒன்றியத்துக்குட்பட்ட கோட்டூர் பகுதியில்  உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  சுமார் 430 மாணவர்கள் பயின்று வருவதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில்  ஜூன் 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை   மதியம் சுமார் 260 மாணவர்களுக்கு பள்ளியில் சாப்பாடு, முருங்கைக்கீரை குழம்பு, முட்டை ஆகியவை சத்து உணவாக வழங்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் சத்துணவு சாப்பிட்ட ஆறு மற்றும் ஏழாம் வகுப்பை சேர்ந்த 18 மாணவர்களுக்கு திடீரென வாந்தி, வயிற்றுவலி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் அதிர்ச்சியடைந்த அங்கிருந்த ஆசிரியர்கள் மாணவர்களை மீட்டு கோட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மருத்துவ மணையில் அனுமதிக்க பட்ட மாணவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

மேலும் இத்தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு ஆனைமலை வட்டாட்சியர் ரேணுகா தேவி, வால்பாறை உட்கோட்ட காவல் கண்கானிப்பாளர் கீர்த்திவாசன், ஆனைமலை பகுதி காவல் நிலைய  ஆய்வாளர் குமார், உணவு பாதுகாப்பு அதிகாரி காளிமுத்து, பொள்ளாச்சி மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் முக்கிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவர்களிடம் நலம் விசாரித்தனர்.

பின்பு மருத்துவமனை மருத்துவர்களிடம் மாணவர்களின் நிலைமையை கேட்டறிந்தனர். மேலும் இச்சம்பவத்தால் மருத்துவமனை வளாக மட்டுமின்றி விவரம் அறிந்த சுற்றுவட்டாரப் பகுதியை பரபரப்பாக காணப்பட்டது. 

தற்போது 15 மாணவர்கள் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது மற்ற மாணவர்களுக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் சாப்பிட்ட உணவு, முட்டை, குழம்பு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 

-M.சுரேஷ்குமார்.

Comments