ஜவ்வாது மலைப்பகுதியில் டி.ஐ.ஜி தலைமையில் காவல்துறையினர் சாராய வேட்டை!! விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கிராம மக்கள் உறுதிமொழி!!!

ஜவ்வாது மலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நம்பியம்பட்டு மற்றும் பால்வாடி ஆகிய மலை கிராமங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களையும் கடத்துபவர்களையும் விற்பனை செய்பவர்களையும் பிடிக்க வேலூர் சரக காவல்துறை டி.ஐ.ஜி  முத்துசாமி அவர்கள் தலைமையில் திருவண்ணாமலை காவல்துறை சூப்பிரண்டு கார்த்திகேயன் அவர்கள் மேற்பார்வையில் ரோந்து காவல்துறையினர் கள்ளச்சாராய வேட்டை நடத்தினர்.

போளூர் துணை காவல்துறை சூப்பிரண்டு கோவிந்தசாமி அவர்கள்,  திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை காவல்துறை சூப்பிரண்டு ரமேஷ் ராஜ் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் , சப் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 150 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் காலை 6 மணி முதல் கொட்டும் மழையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் ஒருவர் கைது செய்யப்பட்டார் மேலும் சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்திய அடுப்புகளை காவல்துறையினர் அடித்து நொறுக்கி உடைத்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அதை தொடர்ந்து பகல் 12 மணி அளவில் நம்பியம்பட்டு கிராம பொதுமக்களிடம் மதுவிலக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. பெண்கள் தங்கள் கணவர்கள் மற்றும் பிள்ளைகளை சாராய தொழிலில் ஈடுபடாமல் இருக்கவும் குடும்ப பொருளாதார முன்னேற்றம் அடையவும் பிள்ளைகளை படிக்க வைத்தல் , விவசாய தொழில் செய்ய ஊக்குவித்தல் போன்ற அறிவிப்புகளை எடுத்துரைக்கப்பட்டது. படித்த இளைஞர்கள் கல்லூரியில் சேர்ந்து மேற்படிப்பு படிக்க காவல்துறை சார்பில் உரிய உதவிகள் செய்ய தயாராக இருப்பதாக  காவல்துறை டி.ஐ.ஜி முத்துசாமி அவர்கள் தெரிவித்தார். மேலும் கள்ளச்சாராயம் காய்ச்சுப்பவர்கள் குறித்து காவல்துறையிடம் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும் அவர் கூறினார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சியின் முடிவில் நம்பியப்பட்டு கிராம பொதுமக்கள் "எங்கள் கிராமத்தில் இனி கள்ளச்சாராயம் காய்ச்ச மாட்டோம் யாரையும் காய்ச்சவும் அனுமதிக்க மாட்டோம்"  என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து டி.ஐ.ஜி முத்துசாமி அவர்கள் ஜமுனா மரத்தூர் காவல் நிலையத்திற்கு சென்று பார்வையிட்டு காவல் துறையினரின் குறைகளை கேட்டறிந்தார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments