லஞ்சம் கேட்டு மிரட்டும் பிஜேபி தலைவர்கள்??

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் பகுதி அருகே உள்ள ராஜகுமாரி லட்சுமி மேடு காலனி என்ற இடத்தில் மேரி என்பவர் வசித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய கணவரின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் சிகிச்சை மேற்கொண்ட நிலையில்ர அவர் உயிரிழந்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனை அடுத்து  மேரி அனைத்து சடங்குகளும் முடித்து விட்டு அவர் வீட்டிற்கு வந்தபோது அந்த இடம் அரசுக்கு சொந்தமானது என்பதால் அதை வேறு ஒருவருக்கு அரசு இலவசமாக கொடுத்துள்ளது. தெரியவந்துள்ளது இதனை அடுத்து ராஜகுமாரி பகுதியைச் சேர்ந்த பஞ்சாயத்தில் தன்னுடைய நிலைமையை எடுத்து கூறிய பொழுது அதன் அருகிலேயே அவர் வசிப்பதற்கான இடத்தை அரசு கொடுத்துள்ளது. 

இந்த இடத்தை கொடுத்தது பிஜேபி தலைவர்களின் முயற்ச்சியினால் தான் என்று சொல்லி இரண்டு மூன்று தலைவர்கள் அவரிடம்  இடம் வாங்கிதந்தற்காக 10 ஆயிரம் ரூபாய் தருமாறு கேட்டு தொந்தரவு செய்வதாக மேரி என்பவர் ராஜாக்காடு காவல் துறையில் புகார் அளித்துள்ளார். பல நேரங்களில் மது அருந்திவிட்டு போன் செய்து தொலைபேசி மூலமாக மிரட்டுவதாகவும் கூறியுள்ளார். ஒரு புகாரின் அடிப்படையில் காவல்துறை அவர்கள் மீது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ஜான்சன், மூணார்.

Comments