கொடிக்கம்பத்தை அகற்ற எதிர்ப்பு! போலீஸ் தடியடி! பேரையூர் அருகே பரபரப்பு!!

மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா, மேலப்பட்டி கிராமத்தில் விசிக கொடி கம்பம் மற்றும் அம்பேத்கர் கொடிக்கம்பம் இந்த கொடிக்கம்பமானது நீரோடை ஆக்கிரமிப்பு பகுதியில், கடந்த 20 வருடங்களுக்கு முன்னால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. 

அரசுக்கு சொந்தமான நீரோடை பகுதியில் கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளதால், அதனை அகற்ற கடந்த பல வருடங்களாக வருவாய்த் துறையினர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் முயற்சி செய்து வந்துள்ளனர். 

கிராம மக்கள் அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டு விசாரணைக்கு பின்பு கொடிக்கம்பங்களை அகற்ற நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக வருவாய்த்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதன் அடிப்படையில், கொடிக்கம்பங்களை அகற்ற உள்ளதாக பேரையூர் தாசில்தார் மற்றும் டி. கல்லுப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆசிக் ஆகியோர் கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதன் அடிப்படையில், பேரையூர் டிஎஸ்பி இலக்கியா மற்றும் ஏ டி எஸ் பி கமலக்கண்ணன் தலைமையில் 500 போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து, ஆக்கிரமிப்பு அகற்ற பேரையூர் தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆஷிக் தலைமையில் வருவாய் துறையினர் மேலப்பட்டி கிராமத்திற்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில், அம்பேத்கர் கொடி கம்பம் மற்றும் விசிக கட்சி கொடி கம்பத்தை அகற்றக் கூடாது எனக் கூறி, 200க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமிப்பு அகற்ற வந்த அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, திடீரென கிராம மக்கள் காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் மீது கற்களை கொண்டு தாக்குதல் நடத்தியதாகவும், 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

Watch video here...

இதனையடுத்து காவல்துறையினர் கிராம மக்கள் மற்றும் கட்சியினர் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்ததாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து பேரையூரில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர். தொடர்ந்து, வருவாய் துறையினர் ஆக்கிரமிப்பில் அமைந்திருந்த கொடி கம்பங்களை அகற்றினர்.

கல்வீச்சு சம்பவத்தில் நாகமலைபுதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், போலீஸ்காரர் சரவணன் மற்றும் பெண் போலீசார், அரசு அதிகாரிகள் என 11 பேர் காயம் அடைந்திருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் போலீசார் நடத்திய தடியடி மற்றும் தள்ளுமுள்ளுவில், ஒரு தரப்பை சேர்ந்த 12 பேர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. காயம் அடைந்தவர்கள் பேரையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.இதுகுறித்து பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 24 பேரை கைது செய்தனர். மேலும் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த விசிக கட்சியின் மதுரை  மாவட்டச்செயலாளர் வழக்கறிஞர் இன்குலாப் "சரியாக 40 ஆண்டுகளுக்கு முன் அதே இடத்தில் திரு.வை.பாலசுந்தரம் அவர்கள் அம்பேத்கர் மக்கள் இயக்கக்கொடியை ஏற்றியுள்ளார். இப்போது திடீரென சாதி இந்துக்களுக்கு இந்த கொடிகள் மீது வெறுப்பு ஏற்பட்டு அகற்றுவதற்கு முயற்சித்துள்ளனர். இதற்கு அவ்வூரின் ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி தீபா பாதமுத்து நாடார் உடந்தை. 

கொடிக்கம்பம் பொது இடத்தில் இருக்கிறதா? பட்டா நிலத்தில் இருக்கிறதா? என்பது குறித்து மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே இந்த வழக்கு குறித்த விபரங்களை விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றக்கிளை உத்தரவிட்டிருந்த நிலையில், காவல்துறை அவசரம் அவசரமாக சாதியவாதிகளுக்கு ஆதரவாக அறிக்கையை ஒப்படைத்தது. 

இதன் வழக்கு வரும் 05.07.2023 அன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்ற சூழலில், காவல்துறை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி கொடிக்கம்பத்தையும், அம்பேத்கர் மக்கள் இயக்கக் கொடிக்கம்பத்தையும் சட்டத்தையும், மக்களின் உணர்வுகளையும் மதிக்காமல் இடித்து அகற்றியுள்ளது. வழக்கு தொடர்பான விபரங்கள் குறித்து விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்கும் போதே  போலீசார்  பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என்றும் பாராமல் அனைவர் மீதும் கடுமையான தடியடி நடத்தி கைது செய்தது கண்டனத்திற்குரியது" என்று கூறினார். 

ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அரசு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கற்களை கொண்டு தாக்கியதால், காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

-தமிழரசன், மேலூர்.

Comments