வால்பாறையில் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்கு மிக அருகில் சிறுத்தைகள் நடமாட்டம்!!! குடியிருப்பு வாசிகள் அச்சம்!!!

கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியில் யானை கரடி சிறுத்தை மான்கள் வரையாடுகள் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு குடியிருப்பு பகுதிக்கு வந்து விடுகின்றன அது போன்று 

வால்பாறை காமராஜர் நகர் குடியிருப்பு அருகில் தேயிலைச் செடிக்குள் இரண்டு சிறுத்தைகள் பதுங்கிய நிலையில் இருப்பதை பார்த்த குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்து உள்ளார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் நாய். பூனை. வீட்டு மிருகங்கள் வளர்த்து வருகின்றனர் குடியிருப்பு வாசிகள் வளர்த்து வரும் நாய் பூனையை பிடிப்பதற்கு தேயிலை காட்டுக்குள் பதுங்கிய நிலையில் மாலை நேரத்தில்  இரண்டு சிறுத்தைகள் இருப்பதை பொதுமக்கள் பார்த்துள்ளனர் இந்தப் பகுதியில் தற்போது சிறுத்தைகள்  நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.\

வனத்துறை அதிகாரிகள் கூண்டு வைத்து சிறுத்தைகளை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க காமராஜர் நகர் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர், 

-சி.ராஜேந்திரன்.

Comments